கைவிட்ட காதலி..காதலன் எடுத்த விபரீத முடிவு.. அடுத்து நடந்த அதிர்ச்சி!
The abandoned girlfriend the drastic decision made by her lover the shock that followed
“எனக்கு நீ தேவையில்லை என்று இளம்பெண் கூறியதால் காதலன் தற்கொலை செய்துகொண்டான்.இதனால் மன உளைச்சலில் இருந்த காதலியும் தற்கொலை செய்து கொண்டார்,
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பூபதி .21 வயதான இவர் அதே பகுதியை சேர்ந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார் . இருவர்களுன் பயங்கரமாக காதலித்து வந்ததுடன் வெளியில் தனிமையில் சந்தித்த வந்துள்ளனர் .இந்தநிலையில் கடந்த 11-ந்தேதி பூபதிக்கும், மாணவிக்கும் தகராறு ஏற்பட்டு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது . அப்போது ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த மாணவி, “இனிமேல் எனக்கு நீ தேவையில்லை. நான் உன்னை பார்க்க மாட்டேன். உன்னோடு பேசமாட்டேன் நான் உன்னை காதலிக்க மாட்டேன்” என்று கூறியதாக தெரிகிறது.
ஆசையா காதலித்த காதலி இப்படி சொல்லிவிட்டுள்ளே என மன உளைச்சலில் இருந்த பூபதி கடந்த 11-ந்தேதி இரவு 7 மணி அளவில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து தன்னால் தான் பூபதி தற்கொலை செய்து கொண்டார் என மாணவி மன உளைச்சலில் இருந்தார். நேற்று அதிகாலையில் மாணவியின் பெற்றோர் எழுந்து பார்க்கும் போது மாணவி மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர், மாணவி ஏற்கனவே இருந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.“எனக்கு நீ தேவையில்லை என்று இளம்பெண் கூறியதால் காதலன் தற்கொலை செய்துகொண்டான்.இதனால் மன உளைச்சலில் இருந்த காதலியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
The abandoned girlfriend the drastic decision made by her lover the shock that followed