முந்திரி பருப்பு பார்பி - எப்படி செய்வது? - Seithipunal
Seithipunal


வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு முதலில் இனிப்பு வழங்குவது வழக்கம். ஆனால், என்ன செய்வது என்று தெரியாமல் கேசரியை தான் செய்வோம். இந்த நிலையில் புதிய சுவையில் முந்திரி பருப்பு பார்பி எப்படி செய்வது என்று இந்தப் பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்:-

முந்திரி பறிப்பு
பிஸ்தா பருப்பு
பால்
பால் பவுடர்
சர்க்கரை
ஏலக்காய் பொடி
மில்க் மெய்ட்
குங்குமப்பூ

செய்முறை:-

முதலில் முந்திரி பருப்பை மிக்சியில் போட்டு தூளாக்கி அதில் பால்பவுடர், சர்க்கரை உள்ளிட்டவற்றை சேர்த்துக் கொள்ளவும். இதையடுத்து ஒரு பாத்திரத்தில் சுடுதண்ணீர் வைத்து அதில் பிஸ்தா பருப்பை ஊற வைத்து தோல் உரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு பால் ஊற்றி, குங்குமப்பூ சேர்த்து குழைத்துக் கொள்ளவும். இப்போது அனைத்துக் கலவையையும் சப்பாத்தி மாவு பிசைவது போல் பிசைந்து சப்பாத்திக் கல்லில் பரப்பி அதன் மேல் நறுக்கி வைத்துள்ள பிஸ்தா பருப்பை தூவி தேவையான வடிவத்தில் நறுக்கிக் கொள்ளலாம். இப்பொது சுவையான முந்திரி பார்பி தயார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

how to make munthiri paruppu barbi


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->