உ.பி-யில் துப்பாக்கியால் சுட்டு நிச்சயதார்த்த கொண்டாட்டம்.! இளைஞர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது குண்டு பாய்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உத்தரபிரதேசம் மாநிலம் புலந்த்சாகர் மாவட்டத்தின் பீபிநகர் காவல் நிலையப் பகுதியில் நேற்று நிச்சயதார்த்த நிகழ்ச்சி ஒன்று கோலாகலமாக நடைபெற்றது. அப்பொழுது நிச்சயதார்த்த விழாவில் விஷால் என்ற நபர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

அப்பொழுது வானத்தை நோக்கி சுட்டதில் எதிர்பாராத விதமாக நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷரத்(24) மற்றும் ராஜ்குமார் ஆகிய இரண்டு பேரும் மீது குண்டு பாய்ந்தது படுகாயம் அடைந்தனர். இதையடுத்து காயம் அடைந்த இவர்கள் இரண்டு பேரையும் விட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் ஷரத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் ராஜ்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், நிச்சயதார்த்த விழாவில் துப்பாக்கியால் சுட்ட விஷாலை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth shot dead at engagement celebration in uttar pradesh


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->