வேறொருவருடன் பழகிய காதலி.. காதலன் துணிகரம்..! - Seithipunal
Seithipunal


வேறொருவருடன் பேசியதால் காதலியை கொலை செய்த காதலனை காவல்துறையினர் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம். தார்வார்(மாவட்டம்) டவுனில் பர்சீ குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முனீர் மகாந்தேஷ். இவருக்கும் உடன் பணிபுரிந்த  சோபா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே இருவரும் காதலித்து வந்துள்ளனர்.  இவர்கள் இருவடும் கடந்த ஆறு மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், சோபாவிற்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த இளைஞருடன் சோபா பழகி வந்துள்ளார்.

இதுகுறித்து முனீருக்கு தெரியவந்தது. மேலும், சோபா முனீருடன் பேசியதை குறைத்து வந்ததாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த முனீர், ஷோபாவை கொலை செய்ய முடிவு செய்தார்.  அதன் படி, கடந்த 3-ந்தேதி ஷோபாவை முனீர் அழைத்து சென்று தன்னை தவிர்ப்பது குறித்து கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே முனீர் சோபாவின் துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டார்.

இதற்கிடையில் சோபாவின் அழுகிய உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டனர்.  முதற்கட்ட விசாரணையில் முனீர் தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக் இருந்த முனீரை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth Killed His Lover


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->