கோயம்புத்தூர் || மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் - நொடியில் நடந்த விபரீதம்.! - Seithipunal
Seithipunal


மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் - நொடியில் நடந்த விபரீதம்.!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் ஆா்வி ரவுண்டானா அருகே வாலிபர் ஒருவர் மின் கம்பத்தில் திடீரென ஏறியுள்ளார். பின்பு அவர் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதை பாா்த்த அந்த வழியே சென்றவா்கள் அவரை கீழே இறங்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். 

ஆனால், அவா் இதனைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் மேலே சென்ற மின் கம்பியை தொடுவது போன்று அடிக்கடி செய்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் எதிர்பாராதவிதமாக மேலே தொங்கிய மின் கம்பியை தொட்டார். இதனால், அவர் மீது மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார்.

இதைப்பார்த்த பொதுமக்கள் சம்பவம் குறித்து காவல் துறையினருக்கும், மின்வாரியத்தினருக்கும் தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் போலீசார் உயிரிழந்தவரின் சட்டையில் இருந்த ஆதார் அட்டையை வைத்து, உயிரிழந்தவர் ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த  பைனா மாஜி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து பைனா மாஜி, கோவையில் எங்கு தங்கியிருந்து வேலை செய்து வந்தார்? அவர் ஏன் தற்கொலைக்கு முயற்சித்தார்? என்று பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

youth died for electric shock attack in coimbatore


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->