பேருந்துக்காக காத்திருந்த மாணவன் - எமனாக வந்து உயிரை பறித்த தென்னை மரம்.!!
youth died for coconut tree falls on head in kerala
பேருந்துக்காக காத்திருந்த மாணவன் - எமனாக வந்து உயிரை பறித்த தென்னை மரம்.!!
தென்கிழக்கு வங்க கடலின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை முன் கூட்டியே கூடிவருவதால் பரவலாக மழை பெய்யும் சூழல் உருவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் கேரளா, தமிழ்நாடு ஆந்திரப் பிரதேச மாநிலங்களிலும் வெப்பமும் அசகவுரியமும் நிலவும் என்றும், ஆந்திராவில் வெப்பம் இன்று அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கேரளாவில் வயநாடு கட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் நந்து. இவர் நேற்று மாலை புளியர்மலை பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது கனமழையின் காரணமாக பலத்தக் காற்று வீசியது. இதனால், தென்னைமரம் ஒன்று நிழற்குடை மேல் விழுந்தது.
இதில் பேருந்து நிழற்குடை இடிந்து நந்து மீது விழுந்ததால் பலத்த காயம் அடைந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நந்துவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பேருந்துக்காக காத்திருந்த மாணவர் தென்னைமரம் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
youth died for coconut tree falls on head in kerala