3 கிராம் நகை குறைவாக இருக்கு, வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலையா? காவல்துறையினர் விசாரணை..! - Seithipunal
Seithipunal


கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கர்நாடக மாநிலம், தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகா மீயாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காதர். இவருக்கு ரூபா என்ற திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்பு ரூபா, தனது கணவர் வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார். தற்போது 1 1/2 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவரின் திருமணத்தின் போது கங்காதர் பெறோர் கேட்ட வரதட்சணையை கொடுத்த நிலையில் 3 கிராம் நகை குறைவாக போட்டுவிட்டதாக தெரிகிறது. 

இதற்காக மாமியார் குடும்பத்தினர் ரூபாவை கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. ஒருகட்டத்தில் அவர்களின் கொடுமை தாங்காமல் விஷமருந்தியுள்ளார். உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.பின்னர் 2 நாட்கள் கழித்து நேற்று தான் ரூபா விஷம் குடித்துவிட்டது பற்றி அவரது பெற்றோருக்கு தெரிவித்துள்ளனர் இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் மருத்துவமனை வருவதற்குள் அவர் உயிரிழந்தார்.

இதனால், ஆத்திரமடைந்த  ரூபாவின்  உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர்  அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.ரூபாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் தலைமறைவான கங்காதரை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Young Woman Death in Karnataka


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->