ரெயிலில் மாரடைப்பால் தவித்த கணவர்.! தனது உயிர் மூச்சையே கொடுத்து காப்பாற்றிய மனைவி..! - Seithipunal
Seithipunal


டெல்லி மாநிலத்திலிருந்து கோழிக்கோடு வரை சென்ற புகைவண்டியில் கேசவன், தயா என்ற தம்பதியினர் பயணம் செய்தனர். இந்த புகைவண்டி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா பகுதிக்கு அருகே சென்ற போது, கேசவனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. 

இதனால், அவரது மனைவி தயா அதிர்ச்சி அடைந்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலின் பேரில் வந்த ரெயில்வே போலீசார் ரெயிலை நிறுத்தி மதுரா ரெயில் நிலையத்தில் கேசவனை கீழே இறக்கினர். அதன் பின்னர் அவருக்கு 10 நிமிடம் சிபிஆர் முதலுதவி செய்ய போலீசார் அறிவுறுத்தினர். 

இதைத் தொடர்ந்து, மனைவி தயா, கணவர் கேசவன் வாயில் தனது மூச்சு காற்றை ஊதி சிகிச்சை அளித்த பின் கேசவன் சீராக மூச்சு விட்டார். பின்னர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கேசவன் சிகிச்சை பெற்று வருகிறார். சிபிஆர் செய்ய அறிவுறுத்தி தனது கணவரை காப்பாற்றிய போலீசாருக்கு மனைவி தயா நன்றி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

wife save husband for heart attack in train


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->