பள்ளி திறக்கும் காலத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ஏழை மாணவர்கள்.! கண்ணீர் மல்கவைக்கும் காரணம்.!  - Seithipunal
Seithipunal


ஊரடங்கு காரணமாக பள்ளிக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. எனவே, ஆன்லைனில் பணம் கட்டி படிக்கும் குழந்தைகளுக்கு மத்தியில், பள்ளியில் கிடைத்த மதிய சாப்பாட்டிற்காக பள்ளிக்குப் போகும் குழந்தைகள் எப்பொழுது பள்ளி திறக்கும் என்ற ஏக்கத்தில் இருக்கின்றனர். 

பீகார் மாநிலத்தில் பாகல்பூர் பகுதியைச் சேர்ந்த பள்ளிக் குழந்தைகள் பலர் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப் பட்டதால், பட்டினி கிடக்கின்றனர். பலரும் பழைய பேப்பர்களை பொறுக்கும் வேலையும், சிலர் பிச்சை எடுத்து சாப்பிடும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. 

அந்த ஊரில் இருக்கும் பல குழந்தைகளும் ஏழ்மை நிலை காரணமாக பள்ளியில் போடப்படும் மதிய உணவிற்காக தான் பள்ளிக்கு செல்வார்களாம். பள்ளியில் மதிய உணவில் பருப்பு, சோயா, சோறு, முட்டை போன்ற உணவுகள் கிடைத்து வருவதால் மகிழ்ச்சியாக இருந்ததாகவும், தற்போது பள்ளி மூடப்பட்டு இருப்பதால் உணவு கிடைப்பது தட்டுப்பாடாக இருப்பதாகவும் அந்த குழந்தைகள் தெரிவிக்கின்றனர். 

மேலும், வெள்ளிக்கிழமை வந்தால் 100% அனைவரும் பள்ளிக்குச் செல்வார்களாம். ஏனென்றால், அன்று அவர்களுக்கு முட்டை போடப்படும் என்று தெரிவிக்கின்றனர். எனவே, அந்த குழந்தைகள் பள்ளி திறக்கும் நாளை எதிர்நோக்கி ஆவலாக காத்திருப்பதாக அவர்களின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

When school open in India 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->