டீசல் காரை பேட்டரி கார்களாக மாற்றும் விழுப்புரம் மெக்கானிக்.! - Seithipunal
Seithipunal


டீசல் காரை பேட்டரி கார்களாக மாற்றும் விழுப்புரம் மெக்கானிக்.!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் அருகே பெரியபாபு சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். மெக்கானிக் ஆன இவர் சமீப ஆண்டுகளாக பேட்டரிகள் மூலம் கார்களை இயங்கச் செய்வது குறித்த ஆய்வுகளை செய்து வந்தார். 

அவற்றின் வெற்றியாக ஏற்கெனவே உள்ள பெட்ரோல், டீசல் இன்ஜின் கார்களை வெறும் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் பேட்டரி கார்களாக மாற்றித் தந்து வருகிறார்.

அதிலும் குறிப்பாக பழைய கார்களில் உள்ள இன்ஜின்களை அகற்றிவிட்டு, அவற்றில் பேட்டரிகளை மட்டும் பொருத்தி பேட்டரி கார்களாக வடிவமைத்து வருகிறார். இது தொடர்பாக தற்போதைக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் இந்த பேட்டரி கார்கள் உருவாக்கப்படுகிறது. 

தனக்கு தேவையான பொருளாதார உதவிகள் கிடைத்தால் இதை விடவும் குறைந்த விலையில் பேட்டரி கார்களாக மாற்றம் செய்து தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மணிகண்டனின் இந்த முயற்சிக்கு அப்பகுதியை சேர்ந்த மக்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vilupuram mechanic change diesel car to battery car


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->