மத்திய பிரதேசத்தில் பேருந்தும்-லாரியும் மோதியதில் 15 பேர் பலி.! உத்திரபிரதேச முதல்-மந்திரி இழப்பீடு அறிவிப்பு - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசத்தில் பேருந்தும்-லாரியும் மோதியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். உத்திரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இழப்பீடு அறிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள சுஹாகி பஹரி பகுதியருகே பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் சென்ற பயணிகள் 14 பேர் உயிரிழந்தள்ளனர்.

மேலும் 40 பேர் காயமடைந்த நிலையில், 20 பேர் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். பேருந்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் உத்தர பிரதேச மாநில மக்கள் என ரேவா மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு நவ்னீத் பசின் தெரிவித்துள்ளார்

இதையடுத்து இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.

இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், மத்திய பிரதேச முதல்-மந்திரியிடம் காயமடைந்தவர்களுக்கான சிகிச்சை பற்றி பேசியுள்ளேன். விபத்தில் உயிரிழந்த உத்தர பிரதேச குடியிருப்புவாசிகளின் உடல்களை திரும்ப கொண்டு வருவது பற்றியும் பேசியுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் இரண்டு லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Uttar Pradesh CM Compensation for madhyapradesh bus lorry accident


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->