பீஹாரில் அணு மின் நிலையம்: 2035 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தது ஒரு மின்நிலையம்: மத்திய அமைச்சர் உறுதி..! - Seithipunal
Seithipunal


பாட்னாவில் கிழக்குப் பிராந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 05-வது மின்துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய மின்துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் கலந்துக் கொண்டார்.  இதன் போது பீஹார் மாநிலத்தின் எதிர்கால எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அணு மின் நிலையம் அமைப்பதை முறையாக முன்மொழியப்பட்டதை அடுத்து இந்த திட்டத்திற்கு மத்திய மின்துறை அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார். 

இது தொடர்பில் மனோகர் லால் கட்டார் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளதாவது: இந்த மாநாடு, மாநிலத்தில் எரிசக்தி தன்னிறைவை நோக்கிய ஒரு பெரிய படியாகும் என்றும், 2035 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு இந்திய மாநிலத்திலும் குறைந்தது ஒரு அணு மின் நிலையத்தை உருவாக்குவதற்கான விரிவான திட்டத்தையும் மத்திய அரசு வகுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், பீஹாரில் அணு மின் நிலையம் மற்றும் 1,000 மெகாவாட் பேட்டரி சேமிப்பு திறன் கொண்ட அலகு அமைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். ஒட்டுமொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்புகளைக் குறைத்தல், 80 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுதல் மற்றும் துறையில் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துதல் போன்ற மின் துறையில் பீஹார் அரசின் முயற்சிகள் பாராட்டுக்குரியது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கோடையில் நிலைமையைச் சமாளிக்க, பீஹார் அரசு அணு மின் நிலையத்திற்கு கூடுதல் மின்சாரம் ஒதுக்க வேண்டும் என்று கோரியது. அந்தந்த மாநிலங்களில் குறைந்தது ஒரு அணு மின் நிலையத்தை அமைக்குமாறு மாநிலங்களைக் கேட்டுள்ளோம் என்றும், மாநிலத்தில் அணு மின் நிலையம் அமைக்க நாங்கள் உதவுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மாநிலத்தின் மின்தட்டுப்பாடு மற்றும் ஆற்றல் தேவைகளை சமாளிக்க உதவும் என்று எதிர்பார்ப்பதாக மனோகர் லால் கட்டார் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Union Minister confirms nuclear power plant to be set up in Bihar


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->