திருமணமாகாத விரக்தி - பெற்றத் தாயிக்கே எமனாக மாறிய மகன்.! - Seithipunal
Seithipunal


திருமணமாகாத விரக்தி - பெற்றத் தாயிக்கே எமனாக மாறிய மகன்.!

தெலங்கானா மாநிலத்தில் உள்ள சித்திப்பேட் மாவட்டம் பண்டா மைலாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடம்மா. இவருக்கு 21 வயதில் ஈஸ்வர் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமானமாகி, அவர் தனது கணவருடன் வெளியூரில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் வெங்கடம்மா தன் மகன் ஈஸ்வரனுக்கு தீவிரமாக பெண் பார்த்து வந்துள்ளார். ஆனால், எந்த வரனும்  பொருத்தமாக இல்லாததால், திருமணம் தாமதமாகி வந்துள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த ஈஸ்வரன் நேற்றிரவு தாய் வெங்கடம்மாவுடன் தகராறில் ஈடுபட்டு அவரை செங்கற்கலால் துடிதுடிக்க அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் போலீசாரை குழப்புவதற்காக கழுத்தை அறுத்து கால்களை வெட்டியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வெங்கடம்மாளின் மகள் போலீசில் அளித்த புகாரின் படி போலீசார் ஈஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஈஸ்வர் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த உறவினர் ராமு என்பவரை கைது செய்தனர். 

அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகாத விரக்தியில் பெற்ற தாயை மகனே துடிதுடிக்க அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples arrested for kill woman in telungana


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->