இரண்டு குழந்தைகளின் உயிர்களை பறித்த குழி.! தெலுங்கானாவில் பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


இரண்டு குழந்தைகளின் உயிர்களை பறித்த குழி.! தெலுங்கானாவில் பரிதாபம்.!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள, நிஜாமாபாத் பால்கொண்டா பகுதியில் இத்வார்பேட்டையில் கிராம வளர்ச்சிக்குழு கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு தண்ணீர் நிரப்ப குழி வெட்டப்பட்டிருந்தது.

இந்தக் குழிக்குள் இன்று மாலை இரண்டு குழந்தைகள் விழுந்துள்ளனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீஸார், விரைந்து வந்து நீரில் மூழ்கிய குழந்தைகளைச் சடலங்களாக மீட்டனர்.

அதன் பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், அப்பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் மற்றும் மேட்டு சாத்விக் என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, போலீசார் அவர்கள் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து பால்கொண்டா எஸ்.ஐ கோபி கூறுகையில், "உயிரிழந்த இரண்டு குழந்தைகளும் நண்பர்கள். அவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது விடிசி கட்டடம் கட்டுவதற்காக தோண்டிய தண்ணீர் நிரம்பிய குழியில் விழுந்து உயிரிழந்துள்ளனர். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றுத் தெரிவித்துள்ளனர். அரசு பணிக்காக தோண்டப்பட்ட குழியில் இரண்டு குழந்தைகள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two childrens drowned in telungana


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->