மகாராஷ்டிரா || சவாரிக்குச் சென்ற கார் ஓட்டுநர் - பிணமாக மீட்பு.!
three peoples kill car driver in maharastra
மகாராஷ்டிரா || சவாரிக்குச் சென்ற கார் ஓட்டுநர் - பிணமாக மீட்பு.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள முன்பை அருகே பால்கர் பகுதியைச் சேர்ந்தவர் ஆசிப். ஓட்டுனரான இவரை 3 பேர் நாசிக் திரிம்பகேஸ்வரர் கோவிலுக்கு சவாரிக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.

அந்த அழைப்பின் பேரில் ஆசிப் மூன்று பேரையும் அழைத்து கொண்டு காரில் புறப்பட்டு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார்.
அதன் படி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் அம்போலி காட் அருகே ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
அதன் படி போலீசார் விரைந்துச் சென்று அந்த சடலத்தை மீட்டனர். பிறகு இது தொடர்பாக நடத்திய விசாரணையில், மீட்கப்பட்ட உடல் காணாமல் போன ஓட்டுநர் ஆசிப் என்பது தெரியவந்தது. ஆனால், அவரது கார் காணாமல் போனதால் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

அதில், ஆசிப்பை சவாரிக்கு அழைத்து சென்ற 3 பேர் அவரைக் கொலை செய்துவிட்டு காரை திருடி சென்றதும், அந்த கார் தற்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் ஓடி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை பிடிப்பதற்குத் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
English Summary
three peoples kill car driver in maharastra