தெலுங்கானாவில் கொடூரம் - பட்டியலின மாணவர்களை தலைகீழாக கட்டி தாக்குதல் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


தெலுங்கானாவில் கொடூரம் - பட்டியலின மாணவர்களை தலைகீழாக கட்டி தாக்குதல் - நடந்தது என்ன?

தெலங்கானா மாநிலத்தில் உள்ள மந்தமாரியில் அங்காடி பகுதியைச் சேர்ந்த கோமுராஜூலா ராமுலு என்பவரின் குடும்பத்தினர் செம்மறி ஆடுகள் வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில், இவர்களது ஆடுகளை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை. பல இடங்களில் தேடியும் ஆடுகள் கிடைக்காததால், கோமுராஜூலா ராமுலுக்கு அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

அதன் படி பட்டியலினத்தை சேர்ந்த தேஜா, கிரண் உள்ளிட்ட இரண்டு பேரை  அழைத்து வந்து ஆட்டு கொட்டைகையில் அடைத்து அவர்களை தலைகீழாக தொங்கவிட்டு, தலைக்கு அடியில் தீ வைத்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் பல மணி நேரமாக இருவரையும் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இளைஞர்களின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் படி போலீசார் ஒரே குடும்பத்தை சேர்ந்த  3 பேர் மீது எஸ்.சி.எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து போலீசார் இளைஞர்களை கட்டி வைத்து கொடூரமாக தாக்குல் நடத்திய மூன்று பேரையும் கைது செய்தனர். பட்டியலின இளைஞர்கள் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples arrested for attack sechduled youths in telungana


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->