கடன் திருப்பி தரமாட்டாங்க...! - கிட்னியை விற்க வற்புறுத்திய கந்துவட்டி கும்பல்...! - Seithipunal
Seithipunal


மராட்டியாவில் உள்ள சந்திராப்பூர் மாவட்டத்தின் மின்தூர் கிராமத்துக்காரர், 29 வயது விவசாயி ரோஷன் சதாசிவ் குடே, கடந்த 2021-ல் பால் வியாபாரம் செய்ய ரூ.1 லட்சம் கந்துவட்டிக் கடன் எடுத்தார்.

ஆனால், விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டங்களால் அந்த கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் நெருக்கடியில் சிக்கினார்.கடன் கொடுத்தவர்கள் வெறுமனே பணத்தை கேட்டு அவமானகரமான அழுத்தம் உருவாக்கினர்.

கொல்கத்தா நகரில், ரோஷனின் கிட்னியை விற்பனை செய்ய வற்புறுத்தும் வரை நிலை வந்தது. அவசரத்தில், ரோஷன் சம்மதித்து கொல்கத்தாவுக்குச் செல்லப்பட்டது; அங்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அவரது ஒரு கிட்னி அகற்றப்பட்டது.

இதற்காக ரூ.8 லட்சம் வழங்கப்பட்டாலும், அந்த பணத்தை வந்துவட்டி கும்பல் வசூலித்துள்ளது.இந்த அநியாயத்திற்குப் பிறகு ரோஷன் திரும்பி போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் கந்துவட்டி கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கொல்கத்தாவில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கும் விசாரணை நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

They wont repay loan shark gang forced me sell my kidney


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->