முதல்வர் மு.க. ஸ்டாலின் தஞ்சை வருகை: நகரம் முழுவதும் நாளை பலத்த பாதுகாப்பு...!- டிரோன்கள் பறக்க முழுத் தடை
cm MK Stalin visit Thanjavur Heavy security across city tomorrow Complete ban flying drones
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் சகோதரி மகளின் திருமணம், நாளை (வியாழக்கிழமை) தஞ்சாவூர் மகாராஜா மகால் வளாகத்தில் காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த குடும்ப விழா, அரசியல் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நடைபெறுவதால் கவனம் பெற்றுள்ளது.

மேலும், திருமண நிகழ்வில் கலந்துகொள்ள மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் காலை 9 மணியளவில் தஞ்சாவூருக்கு வருகை தரவுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கரந்தைத் தமிழ்ச் சங்கம் வளாகத்தில், முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி மற்றும் சங்கத்தின் முன்னாள் தலைவர் ராமநாதன் ஆகியோரின் சிலைகளை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.
அதன் பின்னர், கார் மூலம் திருச்சி வழியாக சென்னை திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது.முதல்வரின் வருகையை முன்னிட்டு தஞ்சாவூர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஏராளமான காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மேலும், பாதுகாப்பு காரணங்களால் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தஞ்சாவூர் பகுதியில் டிரோன்கள் மற்றும் பிற ஆளில்லா வான்வழி சாதனங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையை மீறுவோருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
cm MK Stalin visit Thanjavur Heavy security across city tomorrow Complete ban flying drones