"நடத்தை சந்தேகம்: மனைவி, மாமியார் வெட்டிக்கொலை!" ஆந்திராவில் முன்னாள் கைதியின் பயங்கர வெறிச்செயல்!
andhra pradesh murder case
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் பாபி லங்காவில் குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பின்னணி:
சீதாராமராஜு மற்றும் லதா ஆகிய இருவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள். இருப்பினும், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த சீதாராமராஜு, லதாவைத் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார். கணவனின் சித்ரவதை தாளாமல் லதா தனது தாய் லட்சுமியின் வீட்டிற்குச் சென்று தஞ்சமடைந்தார்.
நள்ளிரவு கொடூரம்:
நேற்று முன்தினம் நள்ளிரவு மாமியார் வீட்டிற்குச் சென்ற சீதாராமராஜு, தனது மனைவியை மீண்டும் வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு மாமியார் லட்சுமி மறுக்கவே, ஆத்திரமடைந்த அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் இருவரையும் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த லதாவும், லட்சுமியும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.
முன்னாள் குற்றவாளி:
தகவலறிந்து வந்த போலீசார் இருவரது சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய சீதாராமராஜுவைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சீதாராமராஜு ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் சிக்கி சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
andhra pradesh murder case