மனநலம் பாதிக்கப்பட்டவரை எரித்துக் கொன்ற கொடூர சம்பவம்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!
The tragic incident in which a mentally ill person was burned to death
5 வயது சிறுவனை கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்டவரை உயிருடன் எரித்து கொலை செய்துள்ளனர்.
அசாம் மாநிலம் திப்ருகர் மாவட்டத்தில் உஜ்ஜல் முரா என்ற 5 வயது சிறுவன் சக சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது சிறுவர்கள் அனைவரும் சுனித் தந்தி என்பவருடைய வீட்டிற்கு முன்பாக விளையாடியுள்ளனர் இதனால் கோபமடைந்த சுனித் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை கண்டித்துள்ளார். அவர் சொல்லியும் கேட்காமல் விளையாடியதால் ஆத்திரமடைந்த சுனித் தந்தி சிறுவன் உஜ்ஜல் முராவை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
மேலும், சுனித் தந்தி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மனநலம் பாதிக்கப்பட்ட சுனித்தின் வீட்டிற்குள் புகுந்து கொடுரமாக தாக்கியுள்ளனர். மேலும், அவரை உயிருடன் எரித்து கொலை செய்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சிறுவன் மற்றும் சுனித்தின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
English Summary
The tragic incident in which a mentally ill person was burned to death