தந்தையை கட்டையால் அடித்துக் கொன்ற மகன் கைது.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் தந்தையை கட்டையால் அடித்து கொடூரமாக கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம், பனஹட்டி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் மல்லப்பா (65). இவரது மகன் துக்கப்பா. இந்நிலையில் மல்லாப்பாவிற்கு சொந்தமாக அப்பகுதியில் உள்ள நிலத்தை தனக்கு எழுதி வைக்குமாறு கூறி துக்கப்பா அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

ஆனால் மல்லப்பா நிலத்தை எழுதிக் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த துக்கப்பா, தந்தையை கொலை செய்ய திட்டம் போட்டுள்ளார். இதையடுத்து வீட்டில் இருந்த தந்தையை கொலை செய்வதற்காக கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் மல்லப்பா சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பனஹட்டி போலீசார், தந்தையை கொடூரமாக கொலை செய்த மகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The son who killed his father was arrested in Karnataka


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->