தந்தை வாங்கி வைத்த மதுவை குடித்த மகன்.. கடைசியில் நடந்த அதிர்ச்சி!
The son who drank the liquor bought by his father the shock that happened in the end
தந்தை வாங்கி வைத்த மதுவை மகன் குடித்ததால் ஆத்திரமடைந்த தந்தை தாக்கியதில் மகன் உயிரிழந்த சம்பவம் மராட்டியத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
மராட்டிய மாநிலம் புனே அருகே உள்ள அமராவதி நகரில் வசித்து வருபம் 65 வயதான ஹீராமன் துர்வே தான் குடிப்பதற்காக மதுபானம் வாங்கி வந்து வீட்டில் வைத்துள்ளார்.இதனை பார்த்த 35 வயதான அவருடைய மகன் திலீப் துர்வே எப்படியாவது அப்பா வாங்கி வைத்துள்ள மதுவை குடித்துவிட வேண்டும் என முடிவு கட்டினார்.அப்பா வீட்டில் இல்லாத நேரம் பார்த்து ஆசை தீர அந்த மதுவை குடித்துள்ளான் திலீப் துர்வே.
வெளிய சென்றுவிட்டு தந்தை ஹீராமன் திரும்பி வந்து பார்த்தபோது, மதுபான பாட்டில் காலியாக இருந்துள்ளது. அதனை குடித்தது அவருடைய மகன் திலீப் என அறிந்ததும், ஆத்திரமடைந்து அவரிடம் இதுபற்றி கேட்டுள்ளார் ,தந்தை ஹீராமன் . அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு
தகராறு முற்றவே, ஹீராமன் மரத்தின் தடி ஒன்றை எடுத்து வந்து திலீப்பின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் குடிபோதையில் இருந்த திலீப் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.
இந்த சம்பவம் பற்றி திலீப்பின் மனைவி ராஜ்குமாரி துர்வே அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று பார்வையிட்டு வழக்கு பதிவு செய்தனர்.எந்த வேலையும் இன்றி சுற்றி திரிந்து வந்த திலீப், மதுவுக்கு அடிமையாகி உள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது .இதையடுத்து இந்த வழக்கில் திலீப்பின் தந்தையை போலீசார் கைது செய்து உள்ளனர். தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.
English Summary
The son who drank the liquor bought by his father the shock that happened in the end