அமெரிக்காவில் இந்திய இளம்பெண் படுகொலை; தமிழகத்தில் பதுங்கிய முன்னாள் காதலன் கைது..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் தரவு பகுப்பாய்வு பணியில் ஈடுபட்டு வந்த இந்திய இளம்பெண் நிகிதா ராவ் கொதிஷாலா என்ற 27 வயதுடைய தெலுங்கு பேசும் பெண் கடந்த 02-ந்தேதி காணாமல் போனதாக கூறப்பட்டது.

இதுபற்றி கொதிஷாலா முன்னாள் காதலன் அர்ஜுன் சர்மா (26) என்பவர், ஹோவர்டு காவல் அதிகாரிகளிடம் புகார் அளித்து விட்டு இந்தியாவுக்கு வந்துள்ளார். இந்த நிலையில், கொதிஷாலா கடுமையாக தாக்கப்பட்டு, பல்வேறு முறை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளதை போலீசார் கண்டுப் பிடித்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணை கொதிஷாலா படுகொலையில் அர்ஜுனுக்கு தொடர்பு உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சர்வதேச அளவில் அவரை தேட தொடங்கினர். இந்நிலையில், இன்று தமிழகத்தில் பதுங்கியிருந்த அர்ஜுனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வரும் நிலையில், அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் பணியும் நடைபெற உள்ளது. இதேநேரத்தில் சமீபத்தில் தான் கொதிஷாலா, பணிபுரிந்த நிறுவனத்திடம் இருந்து  ஆல்-இன் விருது வாங்கினார் என குடும்பத்தினர் தெரிவித்த்துள்ளனர். கொதிஷாலாவின் படுகொலை குறித்து மேரிலேண்ட்  போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The friend who murdered a young Indian woman in the US has been arrested in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->