ஞானசேகரனுக்கு தண்டனை விவரம் இன்று அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு தண்டனை விவரம் இன்று சென்னை மகளிர் கோர்ட்டு அறிவிக்கவுள்ளது,

 கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 23-ந் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இரவு மாணவி ஒருவரை அந்த பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் பாலியல் கொடுமை செய்தார். இதையடுத்து  பாதிக்கப்பட்ட மாணவி கோட்டூர்புரம் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார்.

ஞானசேகரன்ஆளும் கட்சியை  சேர்ந்தவர் என்பதால், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில்  வழக்கு தொடர்ந்ததையடுத்து, ஐ.பி.எஸ். அதிகாரிகள்  கொண்ட சிறப்பு புலன் விசாரணைக்குழுவை அமைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதனை தொடர்ந்து சென்னை போலீஸ் ஞானசேகரனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது.மேலும்  இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள், சைதாப்பேட்டை 9-வது குற்றவியல் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். பின்னர் இந்த வழக்கு சென்னை மகளிர் கோர்ட்டுக்கு மார்ச் 7-ந் தேதி மாற்றப்பட்டது.

இந்த வழக்கின் சாட்சிகள் விசாரணையில்  29 பேர் சாட்சியம் அளித்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 20-ந் தேதி முடிவடைந்தது. இதையடுத்து இந்த வழக்கில் கடந்த 28-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, ஞானசேகரன் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார். மேலும் அவருக்கு என்ன தண்டனை வழங்குவது? என்பது குறித்து வருகிற ஜூன் 2-ந் தேதி இன்று அறிவிக்கப்படும் என்று உத்தரவிட்டார்.

அதன்படி, இந்த வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. ஞானசேகரனுக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்ற? எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The details of the punishment for Jnanashekaran are announced today


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->