எனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது... நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன் - தலைமை நீதிபதி விளக்கம்! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசத்தின் கஜுராகோ கோவில் வளாகத்தில் உள்ள ஜவாரி கோவிலில் சேதமடைந்த விஷ்ணு சிலையை திருத்தி மீண்டும் நிறுவ வேண்டும் என ராகேஷ் தலால் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு சமீபத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான பெஞ்சின் முன் விசாரணைக்கு வந்தது.

ஆனால், மனுவை ஏற்க மறுத்த நீதிமன்றம், இது தனிப்பட்ட சுயலாப நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறியது. அதேசமயம், தலைமை நீதிபதி கவாய், "நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்றால், பிரார்த்தனை மற்றும் தியானம் செய்யுங்கள். கடவுளிடம் சென்று வேண்டிக்கொள்ளுங்கள்" எனக் குறிப்பிட்டார்.

இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. சிலர் இதை தவறாக சித்தரித்ததாகக் கூறினர். இதனைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.

அவர், "எனது கருத்து தவறாக விளக்கப்பட்டுள்ளது. அனைத்து மதங்களையும் நான் மதிக்கிறேன். சிலர் சமூக வலைத்தளங்களில் என் பேச்சை சிதைத்து வெளியிட்டதாகத் தெரியவந்தது. எந்த மதத்தையும் புறக்கணிக்கும் எண்ணமே எனக்கு இல்லை" என்று விளக்கம் அளித்தார்.

இதன் மூலம் வழக்கு சட்ட ரீதியாக தள்ளுபடி செய்யப்பட்டதோடு, நீதிபதியின் கருத்தைச் சுற்றிய சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Supreme Court BR Gavai statement


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->