04 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: மும்பையில் பள்ளி பெண் ஊழியர் கைது..! - Seithipunal
Seithipunal


மும்பையில் 04 வயது சிறுமிக்கு பெண் ஒருவரிடம் இருந்து பாலியல் சீண்டல் சம்பவம் நடந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள ஒரு பிரபலமான பள்ளியில் கடந்த 15-ஆம் தேதி குறித்த சிறுமியை அவரது பாட்டி விட்டுவிட்டு வந்துள்ளார்.

பின்னர் பிற்பகலில் பள்ளியில் இருந்து சிறுமியை பட்டி அழைத்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது தனக்கு சோர்வாக இருப்பதாகவும் உடல் முழுவதும் வலிப்பதாகவும் பெற்றோரிடம் குறித்த சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது, அந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக மருத்துவர்கள் பகீர் தகவலை தெரிவித்துள்ளனர். இதையடுத்து குழந்தையின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் அளித்து, கோரேகான் போலீசில் புகார் அளித்துள்ளனர். குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் பள்ளியின் பெண் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A female school employee has been arrested in Mumbai for raping a 4 year old girl


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->