சோனியா காந்தி குறித்த அவதூறு: துணை முதல் மந்திரி மீது பாய்ந்த வழக்கு! - Seithipunal
Seithipunal


ஆந்திரா துணை முதல் மந்திரியாக இருப்பவர் நாராயணசாமி. இவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி குறித்து அவதூறாக பேசியதாக தெரிவித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திரா காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லு ரவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரில், ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்தபோது ஓ.எஸ். ராஜசேகர் ரெட்டி முதல் மந்திரியாக இருந்த அவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டார். 

இவரது இறப்பிற்கு தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும், சோனியா காந்தியும் தான் காரணம் என துணை முதல் மந்திரியாக இருக்கும் நாராயணசாமி பேசியிருக்கிறார். 

எனவே அவர் மீது வழக்கு தொடர்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து போலீசார் நாராயணசாமி மீது, 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sonia Gandhi Defamation case against Deputy Prime Minister


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->