கல்குவாரியில் விபத்து - 6 பேர் பலி: 16 பேர் படுகாயம்.!!
six peoples died in andira Granite quarry
ஆந்திர மாநிலத்தில் உள்ள பாபட்லா மாவட்டம் பல்லிகுராவா அருகே தனியாருக்கு சொந்தமான கிரானைட் குவாரி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த கல் குவாரியில் வழக்கம்போல் இன்று காலை 9 மணியளவில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில், குவாரியில் பாறைகளை உடைப்பதற்காக வெடிகுண்டுகள் வைக்கப்பட்டபோது எதிர்பாராதவிதமாக பாறைகள் உருண்டு அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் அங்கிருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியை மேற்கொண்டனர். அப்போது அங்கு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 8 பேரை மீட்டு நர்சரோபேட்டாவில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, இந்த விபத்து குறித்து ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டு, பாதுகாப்பை அதிகரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
six peoples died in andira Granite quarry