சேலைக்கட்ட மறுப்புத் தெரிவித்த தாய் - மன உளைச்சலில் மாணவி எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


சேலைக்கட்ட மறுப்புத் தெரிவித்த தாய் - மன உளைச்சலில் மாணவி எடுத்த விபரீத முடிவு.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் உள்ள தேஹு சாலையில் பகுதியில் உள்ள சிவாஜி வித்யாலயாவில் ஏழாம் வகுப்பு படித்து வந்த, மாணவி ஒருவர் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சேலை அணிய வேண்டும் என்று தனது தாயிடம் கேட்டுள்ளார். 

அதற்கு, அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால், அந்த மாணவி வருத்தத்தில் இருந்து வந்த நிலையில், இன்று காலை குளியல் அறைக்குச் சென்று தாழ்ப்பாள் போட்டு விட்டு உள்ளே கதறி அழுதுள்ளார். இதைக்கேட்டு, பதறிப்போன அவரது பெற்றோர், மாணவியை கதவைத் திறக்குமாறுத் தெரிவித்துள்ளனர். 

ஆனால், அந்த மாணவி கதவைத் திறக்கவில்லை. இதையடுத்து, அந்த மாணவியின் பெற்றோர் குளியல் அறையின் கதவை உடைத்துச் சென்று பார்த்த போது, அவர் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட படி இருந்துள்ளார். இதைப்பார்த்த அவரது பெற்றோர் கதறித் துடித்தனர். 

இந்த கதறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி, போலீஸார் விரைந்து வந்து ரேகாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலை கட்ட தாய் மறுப்புத் தெரிவித்ததால் சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

school student sucide in maharastra pune


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->