துப்பட்டாவை இழுத்ததால் பள்ளி மாணவி உயிரிழப்பு - 3 பேர் கைது..! - Seithipunal
Seithipunal


துப்பட்டாவை இழுத்ததால் பள்ளி மாணவி உயிரிழப்பு - 3 பேர் கைது..!

உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள அம்பேத்கர் நகர் மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஹன்ஸ்வார் பகுதியில், பதினேழு வயது பள்ளி மாணவியும், அவரது தோழியும் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தனர். 

அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அந்த மாணவியை பின் தொடர்ந்து சீண்டலில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, இரு சக்கர வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் அம்மாணவியின் துப்பட்டாவை பிடித்து இழுத்துள்ளார். 

இதில் அந்த மாணவி நிலை தடுமாறி மிதிவண்டியிலிருந்து கீழே விழுந்தார். அந்த நேரத்தில், பின்னால் வந்த வேறொரு இரு சக்கர வாகனம் அந்த மாணவியின் மீது மோதியது. இந்த விபத்தில், அந்த மாணவியின் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் படி விரைந்து வந்த போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து சம்பவத்திற்கு காரணமான இருவர் மற்றும் மாணவி மீது மோதிய வாகனத்தை ஓட்டி வந்தவர் உள்ளிட்ட 3 பேரையும்  கண்டுபிடித்தனர். 

அப்போது அவர்கள் காவல் அதிகாரிகளின் துப்பாக்கியை பிடுங்கி கொண்டு தப்பிக்க முயன்றதால், காவல்துறையினர் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி மடக்கி பிடித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school student died in uttar pradesh


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->