ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி - காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!!
school and colleges close in kashmir for operation sindoor
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான 'தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்' பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த நிலையில், 'ஆபரேஷன் சிந்தூர்' எதிரொலியாக காஷ்மீரில் உள்ள 5 எல்லை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜம்மு, சம்பா, கதுவா, ரஜோரி மற்றும் பூஞ்ச் உள்ளிட்ட இடங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இன்று மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
English Summary
school and colleges close in kashmir for operation sindoor