மகளிர் பெட்டியில் ஆண்கள் பயணித்தால் ரூ.2,500 அபராதம்; ரயில்வேயின் புதிய விதிமுறை அமல்..!
Rs 2500 fine for men traveling in womens train compartments
ரயில்வே செயல்பாடுகளை வலிமைப்படுத்தவும், பயணிகளின் ஒழுக்கத்தை மேம்படுத்துவும் வகையில், ரயில்வே சட்டம் 1989-இன் படி, பல விதிகள் திருத்தப்பட்டுள்ளன.
அதன்படி, இனிவரும் காலங்களில் ரயில்களில் மகளிர் பெட்டியில் ஆண்கள் அனுமதியின்றி நுழைந்தாலோ அல்லது பயணித்தாலோ விதிக்கப்பட்ட அபராதம் ரூ.500-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
இது தவிர, ரயில்களில் உரிய டிக்கெட் இல்லாமல் பயணிப்போர் மீது, முன்பு ரூ.250 அபராதம் விதிக்கப்பட்டது.த ற்போது இந்த தொகை, ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது;

ரயில்வே சட்டம் 1989-இன் படி, விதிமீறல்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகை ரூ.500-இல் இருந்து அதிகபட்சமாக ரூ.5,000 வரை உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி, ரயில் நிலையங்களில் அனுமதியின்றி விற்பனை செய்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும், இதை செலுத்த மறுத்தால், நீதிமன்றம் வாயிலாக ரூ.05 ஆயிரம் வரை அபராதம் செலுத்தும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
அதேபோன்று, பெண்களுக்கான பெட்டிகளில் ஆண்கள் பயணித்தால் ரூ.2,500-ஆம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ரயிலில் புகைப் பிடித்தால் ரூ.02 ஆயிரமும், மாற்றுத் திறனாளிகள் பெட்டியில் பயணித்தால், ரூ.02 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர, ரயில்களில் அபாயகரமான பொருட்களை எடுத்து சென்றால், ரூ.02 ஆயிரம் முதல் 05 ஆயிரம் வரை விதிக்கப்பட்ட அபராதம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
English Summary
Rs 2500 fine for men traveling in womens train compartments