எஸ்சிஓ மாநாடு: 'பயங்கரவாத ஒழிப்பில் இரட்டை நிலைப்பாட்டுக்கு இடம் கொடுக்க கூடாது': ராஜ்நாத் சிங் பேச்சு..!
Rajnath Singhs speech at the SCO summit says there should be no room for double standards in combating terrorism
பயங்கரவாத ஒழிப்பில் இரட்டை நிலைப்பாடு இருக்க கூடாது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 2 நாள் மாநாடு சீனாவின் கிழக்கு ஷான்டாங் மாகாணம் குவிங்டாவ் நகரில் நேற்று தொடங்கியது. குறித்த மாநாட்டின் ஒரு பகுதியான உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றுள்ளார்.
-4ctge.png)
இந்த மாநாட்டில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், ‘ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடு இந்தியா மீது தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஏவி வருகிறது. இதை குழுவின் மற்ற உறுப்பு நாடுகள் கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாகவே ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது என்றும், அரசு ஆதரவுடன் நிகழும் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்ப்பதற்கான உரிமையே நாங்கள் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் என்றும் கூறியுள்ளார்.
-w7b97.png)
அதாவது, எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர கூடாது என்ற இலக்கோடு ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டதாகவும், சில நாடுகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அரசு கொள்கையாகவே கொண்டிருக்கின்றன என்றும் அத்தகைய நாடுகள் தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக உள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அங்கு தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங், பயங்கரவாதத்தின் மையப்புள்ளியாக திகழ்ந்தால் என்ன நேரும் என்பதை நாங்கள் ஆபரேஷன் சிந்தூர் மூலம் காட்டியுள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இனியும் அத்தகைய இலக்குகளை குறிவைக்க தயங்கமாட்டோம் என்றும், பயங்கரவாத ஒழிப்பில் இரட்டை நிலைப்பாட்டுக்கு இடம் கொடுக்க கூடாது என்றும் அறிவித்துள்ளார். தொடர்ந்து, எஸ்சிஓ குழு அத்தகைய நிலைப்பாடு கொண்ட நாடுகளை தயக்கமின்றி கண்டிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
English Summary
Rajnath Singhs speech at the SCO summit says there should be no room for double standards in combating terrorism