நான்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தின் நான்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிகார், பாலி, பில்வாரா மற்றும் தௌஸா மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால், அந்த பகுதிகளில் பாதுகாப்பு கையேந்தப்பட்டது. சிகார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெறவிருந்த தலைமைச் செயலாளரின் ஆலோசனைக் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

பாலி மாவட்டத்தில் அலுவலகம் முழுவதும் வெடிக்கும் என எச்சரிக்கப்பட்ட மின்னஞ்சல் வந்ததை அடுத்து, மக்கள் வெளியேற்றப்பட்டு, மோப்ப நாய்கள் கொண்டு தேடுதல் நடந்தது. பில்வாராவிலும் மிரட்டல் காரணமாக அலுவலகம் அடைக்கப்பட்டு, அஜ்மீரிலிருந்து நிபுணர்கள் அழைத்து வரப்பட்டனர்.

தௌஸா மாவட்டத்துக்கும் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்ததால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சல்களை அனுப்பிய மர்ம நபரை கண்டறிய குற்றப்புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rajasthan $ District Collector Office Bomb threat


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->