உ.பி - ஒப்பந்ததாரரை மிரட்டி லஞ்சம் - அதிரடி காட்டிய சி.பி.ஐ. அதிகாரிகள்.! - Seithipunal
Seithipunal


உ.பி - ஒப்பந்ததாரரை மிரட்டி லஞ்சம் - அதிரடி காட்டிய சி.பி.ஐ. அதிகாரிகள்.!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோரக்பூர் நகரில் வடகிழக்கு ரெயில்வேயின் முதன்மை தலைமை பொருள் அதிகாரியாக ஜோஷி என்பவர் பணியாற்றி வந்துள்ளார். 

இவர் ஒப்பந்ததாரர் ஒருவரிடம் தனக்கு ரூ.7 லட்சம் லஞ்சம் தராவிட்டால் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இது தொடர்பாக, அந்த ஒப்பந்ததாரர் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் புகார் அளித்தார். 

அதன் படி, விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள் ஜோஷியிடம் ரூ.3 லட்சத்தை லஞ்சமாக கொடுக்கும்படி ஒப்பந்ததாரரிடம் தெரிவித்ததையடுத்து, அவர் நேற்று முன்தினம் ஜோஷியிடம் பணத்தை கொடுத்துள்ளார்.

இதனை அங்கு மறைந்திருந்து பார்த்த அதிகாரிகள் கையும், களவுமாக கைது செய்தனர். பின்னர், சி.பி.ஐ அதிகாரிகள் ஜோஷிக்கு சொந்தமான இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் அவரது வீட்டில் இருந்து ரூ.2.61 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

railway officer arrested in uttar pradesh for bribe


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->