அதிகாரிகள் வீட்டில் ரெய்டு...தொழிலதிபர்கள் ஓட்டம்...! - கொல்கத்தாவில் அமலாக்கத்துறையின் அதிரடி 'ஆபரேஷன்'...!
Raid officials houses Businessmen flee Enforcement Directorate operation Kolkata
மேற்குவங்க மாநிலத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கைச் சுற்றியுள்ள பரபரப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அமலாக்கத்துறை நேற்று கொல்கத்தா நகரில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு, அதிகார வட்டாரங்களை அதிரவைத்துள்ளது.
இந்த சோதனையில், கொல்கத்தா காவலர்கள் துறையின் துணை கமிஷனராக பணியாற்றும் ஷாந்தனு சின்ஹா பிஸ்வாஸ் வசிக்கும் பாலிகஞ்ச் பகுதியில் உள்ள அவரது இல்லம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

அதேசமயம், ‘சன் என்டர்பிரைசஸ்’ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரான தொழிலதிபர் ஜாய் காம்தாரின் தொடர்புடைய அலுவலகங்கள் மற்றும் வசிப்பிடங்களிலும் அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதம் 1ஆம் தேதி நடந்த சோதனைகளில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் கணிசமான அளவு பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின் தொடர்ச்சியாகவே இந்த அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் பின்னர், சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டில் தொழிலதிபர் ஜாய் காம்தாரை அமலாக்கத்துறையினர் திடீரென கைது செய்தனர்.
அவரை நீதிமன்ற அனுமதியுடன் காவலில் எடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் கொல்கத்தா காவலர்கள் துறையின் மற்றொரு துணை கமிஷனர் பிஸ்வஜித் போத்தார், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளார் என்பதும் புதிய திருப்பமாக தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
Raid officials houses Businessmen flee Enforcement Directorate operation Kolkata