மாணவர்களுக்கான கல்வி சீர்திருத்தத்துக்கான இயக்கம்; ராகுல் காந்தி அழைப்பு..! - Seithipunal
Seithipunal


சிபிஎஸ்இ தேர்வு குளறு​படிகள், நீட் வினாத்​தாள் கசிவுப் பிரச்​சினை​களுக்கு எதி​ராக, காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்தி ராஜஸ்தானின் கோடா நகரில் நேற்று (ஜூன் 17) தனது நாடு தழு​விய பிரச்​சா​ரத்​தைத் தொடங்கி வைத்தார். இதில், ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். இதையடுத்து, ஜூலை 10-இல் அலகா​பாத், பாட்னாவில் (ஜூலை 10), டெல்லியில் ஜூலை 14 ஆகிய இடங்​களிலும் மாணவர் மாநாடு​களை நடத்தவுள்ளார்.

இது குறித்து ராகுல் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;

''வினாத்தாள் கசிவு, தேர்வு தொடர்பான சிக்கல்கள், அதிக கட்டணம் ஆகியவற்றால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த கல்வி அமைப்பு உங்கள் கனவுகளைச் சிதைத்திருந்தால், உங்கள் குடும்பத்தினர் தங்கள் வாழ்நாள் சேமிப்பை உங்கள் கல்விக்காகச் செலவிட்டிருந்தால், மாணவர்களுக்கான குரல் என்ற இந்த இயக்கம் உங்களுக்கானதுதான்.

இது வெறும் பிரச்சாரம் மட்டுமல்ல. உங்கள் கோரிக்கைகளை நேரடியாக அரசாங்கத்திடம் கொண்டு செல்வதற்கான ஒரு தளம். குறைந்த செலவில் கல்வி, நியாயமான தேர்வுகள், கண்ணியமான வேலைவாய்ப்பு ஆகியவற்றை நீங்கள் பெற இந்த இயக்கத்தில் இணையுங்கள். 

இதில், நீங்கள் இணைவதன் மூலம் இந்த இயக்கம் வலுப்பெறும்; மாணவர்களின் குரலும் வலுப்பெறும்'' என தெரிவித்துள்ளார். இதற்காக, அவர் https://rahulgandhi.in/chhatron-ki-goonj என்ற இணையதளத்தையும் பகிர்ந்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rahul Gandhi calls for joining the movement for educational reform for students


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->