விசாரணைக்கு சென்ற பட்டியலின வாலிபர்.! சிறுநீரை குடிக்க சொல்லி கட்டாயபடுத்திய எஸ்.ஐ பணியிடமாற்றம்.! - Seithipunal
Seithipunal


விசாரணைக்கு சென்ற பட்டியலின வாலிபர்.! சிறுநீரை குடிக்க சொல்லி கட்டாயபடுத்திய எஸ்.ஐ பணியிடமாற்றம்.!

ஆந்திரா மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் குங்குடுபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட பிரசாத். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவர் கடந்த ஜூலை மாதம் பெண் மாயமாகியுள்ளதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய டூவீலரை வாங்கியுள்ளார். 

இதற்காக போலீஸார் வெங்கட பிரசாத்தை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த வெங்கட பிரசாத் வலி தாங்கமுடியாமல் போலீசாரிடம் தண்ணீர் கேட்டுள்ளார். அதற்கு காவல் உதவி ஆய்வாளர் சிவாஜி தண்ணீருக்குப் பதிலாக சிறுநீரை குடிக்கச் சொல்லி திட்டியுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து தகவல் வெளியானதையடுத்து ராஜமகேந்திவரம் உதவி காவல் கண்காணிப்பாளர் ரஜனி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு சென்று விசாரணை நடத்தியதுடன், வெங்கட பிரசாத்தை நேரில் சந்தித்து விசாரணை நடத்தி அவரிடம் வாக்குமூலம் வாங்கினார். 

இதைத்தொடர்ந்து போலீசார் வெங்கடபிரசாத் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் சிவாஜி மீது வழக்குப்பதிவு செய்து, பணியிடமாற்றம் செய்துள்ளனர். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பட்டியலின இளைஞர் சரமாரியாக தாக்கப்பட்டதுடன், சிறுநீர் குடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

police SI attack Scheduled Caste student in andira


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->