ட்ரம்பின் வரி விதிப்பின் எதிரொலி: பிரேசில் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி: வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் குறித்து ஆலோசனை..!
PM Modi holds talks with Brazilian President on trade and security
அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது வரி வாரி விதித்து வருகிறார். அதன்படி, இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ள தோடு, பிரேசில் பொருட்களுக்கும் 50 சதவீதம் வரி விதித்துள்ளார்.
இவ்வாறு இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அதிக வரி விதித்துள்ள சூழ்நிலையில், பிரேசில் அதிபர் லுலா டா சில்வா உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரேசில் அதிபர் லுலா டா சில்வா கூறுகையில், பிரேசில் தனது வர்த்தக நலன்களைப் பாதுகாக்க உலக வர்த்தக அமைப்பு உட்பட அனைத்து கருவிகளையும் பயன்படுத்தும் என்றும், அதிபர் டொனால்டு டிரம்பை அழைக்கப் போவதில்லை எனவும், அவருடன் பேச விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அதற்கு பதிலாக நம் நாட்டின் பிரதமர் மோடி மற்றும் பிற நாட்டு தலைவர்களுடன் பேசுவேன் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று டில்லியில் நடந்த மாநாட்டிலும் பிரதமர் மோடி பேசியது போது, மரபணு மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதியில்லை என்றும், எந்த விலை கொடுத்தாவது இந்திய விவசாயிகளை காப்பேன் என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி மற்றும் பிரேசில் அதிபர் இருவரும் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்தியா, பிரேசில் ஆகிய இரு நாடுகளுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், இந்த வரி விதிப்புக்கு இரு நாடுகளுமே கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன. இந்த சூழ்நிலையில் இரு நாடுகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
English Summary
PM Modi holds talks with Brazilian President on trade and security