கிங்டம் படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் - உய்ரநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான திரைப்படம் 'கிங்டம்'. இந்த திரைப்படத்தில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்து சென்றவர்களை (ஈழத்தமிழர்கள்) அடிமைகள் போலவும் தீண்ட தகாதவர்களாகவும் நடத்துவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இதன் காரணமாக, கிங்டம் திரைப்படத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, 'கிங்டம்' பட நிறுவனம் தமிழ் மக்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:- "கிங்டம் படத்தின் சில காட்சிகள் தமிழ் மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியதாக அறிந்தோம். 

படத்தின் கதை முற்றிலும் கற்பனையானது என்று உறுதியளிக்கிறோம். தமிழ் மக்களின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். இதையும் மீறி மக்களின் உணர்வுகள் ஏதேனும் புண்பட்டு இருந்தால் மிகவும் வருந்துகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கிங்டம் பட நிறுவனம் சார்பில் தமிழ்நாட்டில் கிங்டம் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது, 'கிங்டம்' படம் திரையிட இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதால், காவல்துறையினர் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

சென்சார் சான்று வழங்கப்பட்ட பிறகு படம் திரையிடப்படுவதை யாரும் தடுக்க முடியாது. அதே சமயம் உரிய அனுமதி பெற்று போராட்டம் நடத்த நாம் தமிழர் கட்சிக்கு உரிமை உள்ளது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chennai hc order security to kingdom movie released theaters in tamilnadu


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->