சுயேட்சை எம்எல்ஏவின் மகன் மீது தாக்குதல் - புதுச்சேரியில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தில் உள்ள உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்எல்ஏ நேருவின் மகன் ரகு என்ற ரகோத்தமன் இருசக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் இரவு பாலாஜி தியேட்டர் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது, சரக்கு வாகனம் ஒன்றை அதன் ஓட்டுநர் சாலையின் குறுக்கே நிறுத்தி விட்டு செல்போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார். இதுகுறித்து ரகு கேள்வி கேட்டதால் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. இதைப்பார்த்து ஓடிவந்த அங்கிருந்தவர்கள் இருவரையும் விலக்கிவிட்டனர். உடனே ரகு தனது வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் சரக்கு வாகன ஓட்டுநரின் ஆதரவாளர்கள் கும்பலாக திரண்டு, சாந்திநகரில் உள்ள நேரு எம்எல்ஏவின் வீட்டுக்குச் சென்று செல்போன் மூலம் எம்எல்ஏவை தொடர்புகொண்டு பேசியுள்ளனர். 

இதையடுத்து எம்எல்ஏ நேரு, தனது மகனை அழைத்து நடந்த சம்பவம் குறித்து கேட்டுள்ளார். அப்போது மீண்டும் இருதரப்பினர் இடையே பிரச்சனை இறுதியில் மோதலாக மாறியுள்ளது. இதில், எம்எல்ஏ-வின் மகன் ரகு, அவரது மனைவி காயத்ரி ஆகியோரை வாகன ஓட்டுநரின் தரப்பினர் தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து ஒன்று திரண்ட எம்எல்ஏ-வின் ஆதரவாளர்கள் வாகன ஓட்டுநர் தரப்பைச் சேர்ந்த ஒருவரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இந்தச்சம்பவம் குறித்த உருளையன்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

peoples attack mla son in puthuchery


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->