இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம்...மீண்டும் சொல்கிறார் பாகிஸ்தான் மந்திரி!
Pakistan minister says again that they want to hold talks with India
சிந்துநதி ஒப்பந்தத்தை சட்டவிரோதமாக நிறுத்தி வைப்பதன் மூலம், பாகிஸ்தானுக்கு தண்ணீர் வருவதை நிறுத்துவது போராக கருதப்படும்" என்று பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி தெரிவித்தார்.
கடந்த மாதம் 22-ந் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பு பொறுப்பேற்றது.
இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 7-ந் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய படைகள் பாகிஸ்தானின் பயங்கரவாத தளங்களை குறிவைத்து தாக்கின. இதில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர்.பதிலுக்கு பாகிஸ்தானும் டிரோன்கள் மூலம் நடத்திய தாக்குதலை இந்திய ராணுவத்தினர் வழியிலேயே முறியடித்தனர்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 10-ந் தேதி சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேறுவதை பற்றி மட்டுமே நடத்தப்படும் என்று இந்தியா கூறி வருகிறது.
இந்நிலையில், இந்தியாவுடன் கூட்டு பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி இஷாக் தர் தெரிவிக்கையில்:, 18-ந் தேதிவரை சண்டை நிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், சர்ச்சைக்குரிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியாவுடன் கூட்டு பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று உலகத்துக்கு சொல்லி இருக்கிறோம். சிந்துநதி ஒப்பந்தத்தை சட்டவிரோதமாக நிறுத்தி வைப்பதன் மூலம், பாகிஸ்தானுக்கு தண்ணீர் வருவதை நிறுத்துவது போராக கருதப்படும்" என்று அவர் பேசினார்.
English Summary
Pakistan minister says again that they want to hold talks with India