இந்திய போர் விமான இழப்பு: ராணுவ தளபதி மறைமுக ஒப்புதல்! உண்மை இழப்பு என்ன? காங்கிரஸ் போர்க்கொடி! - Seithipunal
Seithipunal


மே 7 முதல் 10 வரை பாகிஸ்தானுடனான மோதலில், இந்தியா போர் விமானங்களை இழந்ததை ராணுவத் தளபதி அனில் சவுகான் மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்க்ரி-லா மாநாட்டில் பங்கேற்று ப்ளூம்பெர்க் டிவிக்கு பேட்டி அளித்த அவர், "ஆரம்ப கட்டத் தாக்குதல்களில் சில விமானங்களை இழந்தோம்.

எத்தனை என்பதை விட, ஏன் இழந்தோம் என்பதே முக்கியம். தவறுகளை புரிந்து கொண்டு, சரி செய்தோம். அதன்பின் எங்கள் விமானங்கள் மீண்டும் இலக்குகளை தாக்கின" என்றார்.

அதே நேரத்தில், பாகிஸ்தான் கூறும் ஆறு இந்திய விமானங்கள் வீழ்த்தப்பட்டதாகும் தகவல் தவறானது என்றும் அவர் மறுத்தார்.

இந்த நிலையில், "ஆபரேஷன் சிந்தூர்" காலத்திலான இழப்புகள் குறித்து அரசு வெளிப்படையாக மக்களுக்கு தகவல் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.

இது தேசப்பற்றுக்கு எதிரானது அல்ல, பொறுப்புக்கூறலுக்கான அவசியம் என்றும், மக்கள் கேட்கிற கேள்விகளுக்கு பதில் தரப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Operation Sindoor  Congress


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->