இந்திய போர் விமான இழப்பு: ராணுவ தளபதி மறைமுக ஒப்புதல்! உண்மை இழப்பு என்ன? காங்கிரஸ் போர்க்கொடி!
Operation Sindoor Congress
மே 7 முதல் 10 வரை பாகிஸ்தானுடனான மோதலில், இந்தியா போர் விமானங்களை இழந்ததை ராணுவத் தளபதி அனில் சவுகான் மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்க்ரி-லா மாநாட்டில் பங்கேற்று ப்ளூம்பெர்க் டிவிக்கு பேட்டி அளித்த அவர், "ஆரம்ப கட்டத் தாக்குதல்களில் சில விமானங்களை இழந்தோம்.
எத்தனை என்பதை விட, ஏன் இழந்தோம் என்பதே முக்கியம். தவறுகளை புரிந்து கொண்டு, சரி செய்தோம். அதன்பின் எங்கள் விமானங்கள் மீண்டும் இலக்குகளை தாக்கின" என்றார்.
அதே நேரத்தில், பாகிஸ்தான் கூறும் ஆறு இந்திய விமானங்கள் வீழ்த்தப்பட்டதாகும் தகவல் தவறானது என்றும் அவர் மறுத்தார்.
இந்த நிலையில், "ஆபரேஷன் சிந்தூர்" காலத்திலான இழப்புகள் குறித்து அரசு வெளிப்படையாக மக்களுக்கு தகவல் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.
இது தேசப்பற்றுக்கு எதிரானது அல்ல, பொறுப்புக்கூறலுக்கான அவசியம் என்றும், மக்கள் கேட்கிற கேள்விகளுக்கு பதில் தரப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Operation Sindoor Congress