மன்னிப்பு கேட்ட முதல்வர்! பலியான மூவர்! படுகாயத்துடன் சிகிச்சையில் பலர்!
odisha temple accident cm apology
ஒடிசாவின் புரியில் நடைபெற்ற புகழ்பெற்ற ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை நிகழ்வில் இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசல், மூவர் உயிரிழப்புக்கும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைவதற்கும் காரணமாகியுள்ளது.
புரி நகரில் உள்ள ஸ்ரீ குந்திச்சா கோயில் அருகே அதிகாலை 4.30 மணியளவில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது. உயிரிழந்தோர் ப்ரவிதா தாஸ் (52), பிரேம் கந்தா (52) மற்றும் பசந்தி சாஹு (42) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
புரி மாவட்ட ஆட்சியர் சித்தார்த் எஸ். ஸ்வெயின், "அதிகாலை 4 மணிக்கு அதிகமானோர் ஒரே நேரத்தில் கூடியதால், நெரிசல் ஏற்பட்டது. கூட்ட மேலாண்மையில் குறைபாடுகள் இருந்ததா என்பதையும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் போதுமானதா என்பதையும் விசாரிக்கப்படும்," எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், மாநில முதல்வர் சரண் மாஞ்சி இரங்கல் தெரிவித்து, "மஹாபிரபுவை காணும் பக்தர்களின் ஆர்வமே இந்த துயரத்தை உருவாக்கியது. இது குறித்து நான் மற்றும் அரசு முழுமையாக பொறுப்பேற்கிறோம். ஜெகநாத பக்தர்களிடம் மன்னிப்பு கோருகிறோம்," எனக் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மீதான விமர்சனமும், மறுநோக்கும் விசாரணையும் தற்போது தீவிரமாகிறது.
English Summary
odisha temple accident cm apology