லாரி மீது மோதி தீ பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்.. நோயாளியின் கதி என்ன? ஒடிசாவில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


ஒடிசாவில் லாரி மீது மோதிய ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்ததில் 4 பேர் காயமடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஒடிசாவில் நோயாளி ஒருவருடன் பஸ்தாவில் இருந்து பாலாச்சூர் மாவட்ட மருத்துவமனைக்கு அவசர உறுதி இன்று காலை சென்று கொண்டிருந்தது. 

அப்போது முர்கிமுண்டி சாக் அருகே அவசர ஊர்தி முன்னாள் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது திடீரென மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் அவசர ஊர்தி திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியதால் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் இடத்திற்கு விரைந்து சென்று நோயாளி மற்றும் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் படுகாயம் அடைந்த அவசர உறுதியின் மருந்தாளர் மேல் சிகிச்சைக்காக எஸ் சி பி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Odisha Ambulance lorry collided accident


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->