மும்பை அருகே சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 6 பேர் கைது.!
near mumbai six youngboys arrested for sexual harassment
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரைச் சேர்ந்த சிறுமி ஒருவரை, அவரின் ஆண் நண்பர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு பிறந்தநாள் விழாவிற்காக வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு அந்த ஆண் நண்பரின், நண்பர்கள் ஐந்து பேர் இருந்தனர்.
அப்போது அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி அவருடைய ஆண் நண்பர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த நபரை தொடா்ந்து மற்ற ஐந்து பேரும் சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர். அந்த சிறுமியின் கதறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அந்த தகவலின் படி, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிறுமியை மீட்டு, அவருடன் இருந்த ஆறு பேரையும் பிடித்தனர். அதன் பின்னர் அவர்களிடம் விசாரணை செய்ததில் சிறுமியை ஆண் நண்பர் உள்பட ஆறுபேரும் மிரட்டி பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆறு வாலிபர்களையும் கைது செய்தனர். அதில், மூன்று பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால் அவர்களை டோங்கிரியில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பை அருகே வசாய் பகுதியில் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த ஆண் நண்பர் உள்பட ஒன்பது பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.
English Summary
near mumbai six youngboys arrested for sexual harassment