மகாராஷ்டிரா : 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! போக்சோவில் கைது.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் வதோடா பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், ஒரு பெண்ணுடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார். அந்த பெண்ணுடன் முதல் கணவர் மூலமாக பிறந்த 12 வயது மகள் இருந்து வந்தார். 

இந்நிலையில் அந்த சிறுமியின் தாய் வேலைக்கு செல்லும் நேரம் பார்த்து அந்த நபர் அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி பலாத்காரம் செய்துள்ளார். இந்தக் கொடுமை கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து வந்துள்ளது. 

ஆனால், இந்த சம்பவத்தை வெளியே யாரிடமாவது தெரிவித்தால் மிகவும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அந்த நபர் சிறுமியை மிரட்டியுள்ளார்.

இதன் காரணமாக, அந்த சிறுமி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் மூடிமறைத்தார். இருந்தாலும், அந்த நபரின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்ததால் சிறுமி நடந்த சம்பவத்தை தனது தாயிடம் தெரிவித்தார்.

இதைக்கேட்டு, அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி, போலீசார் அந்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near maharastra man arrested for sexuall harassment


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->