கர்நாடகா : ஞானயோகேஸ்வரா மடத்தின் மடாதிபதி சித்தேஸ்வர் சுவாமி காலமானார்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் விஜயாபுராவில் உள்ள ஞானயோகேஸ்வரா மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் சித்தேஸ்வர் சுவாமி. இவர் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருவதால், வடகர்நாடக மக்கள் நடமாடும் கடவுள் என்று அழைத்து வருகின்றனர். 

இந்நிலையில், இவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதனால் மடத்தின் ஊழியர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் சித்தேஸ்வர் சுவாமி மடத்தை விட்டு வர மாட்டேன் என்று கூறியதால், அவருக்கு மடத்தில் வைத்தே சிகிச்சை அளித்தனர். 

இதையறிந்த மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மையும் மடத்திற்கு நேரில் சென்று சித்தேஸ்வர் சுவாமியிடம் உடல்நலம் குறித்து விசாரணை செய்தார். அதேபோல் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் செல்போன் அழைப்பு மூலம் பிரதமர் மோடியும், சித்தேஸ்வர் சுவாமியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். 

இந்த நிலையில், நேற்றிரவு திடீரென சித்தேஸ்வர் சுவாமியின் உடல் நிலை மோசமடைந்ததால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தாலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதையடுத்து சித்தேஸ்வர் சுவாமியின் உடல் இன்று விஜயப்புராவில் உள்ள ஒரு பள்ளியின் மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிறகு அவரது உடல் ஊர்வலமாக மடத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. 

அங்கு சித்தேஸ்வர் சுவாமியின்  உடலுக்கு மடத்தின் சம்பிரதாய முறைப்படி இறுதிச்சடங்குகள் நடைபெற்று, மாலை 5 மணி அளவில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near karnataga abbot of Gnanayokeswara Mutt Chitheswar Swamy passed away


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->