பைக் வாங்க பணம் தராததால் மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவர்.! - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி மாவட்டம் நம்கும் பகுதியை சேர்ந்தவர் அமீர் கான். இவர் மனைவி ஹினா பர்வீன். அமீர்கான், பைக் வாங்க வேண்டும் என்பதற்காக மாமனாரிடமிருந்து ரூ.70 ஆயிரம் வரதட்சணையாக வாங்கி வரும்படி தனது மனைவி ஹினாவை வற்புறுத்தி வந்துள்ளார். 

இதனால், ஹினா கடந்த சனிக்கிழமை தனது தந்தை வீட்டிற்கு சென்று பணம் கேட்டுள்ளார். அதற்கு அவரது தந்தை ஏற்பாடு செய்து தருவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஹினா நேற்று தனது கணவர் வீட்டிற்கு சென்றப்போது, பைக் வாங்க வரதட்சணையாக கேட்ட ரூ.70 ஆயிரம் பணம் எங்கே என்று அமீர் கேட்டுள்ளார். 

அதற்கு ஹினா பணத்தை விரைவில் தருகிறேன் என்று கூறியதால் ஆத்திரமடைந்த அமீர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சில நேரத்தில் இந்த வாக்குவாதம் முற்றியதால், வீட்டில் வைத்திருந்த ஆசிட்டை அமீர் தனது மனைவி ஹினாவின் முகத்தில் ஊற்றினார். இதனால், அலறி துடித்த ஹினாவின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்மத்தனர்.

ஆனால் அவர்கள் வருவதற்குள், அமீர் வீட்டில் இருந்து தப்பியோடிவிட்டார். அதன் பின்னர், அக்கம்பக்கத்தினர் ஹீனாவை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு, ஆசிட் பட்டதால் படுகாயமடைந்த ஹினாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஹினாவின் வாய்க்குள் ஆசிட் ஊற்றியதால் அவரால் பேச முடியவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அமீர் மீது வழக்கு பதிவு செய்து, அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near jarkant Husband poured acid on wife for money not gave buy a bike


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->