பெங்களூர் : வீட்டு வேலை செய்ய வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் கைது.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு கூட்லு பகுதியைச் சேர்ந்தவர் பரசிவமூர்த்தி. இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு வயது முதிர்ந்த நிலையில், தந்தை மற்றும் தாய் உள்ளனர். 

அவர்களை கவனித்து கொள்வதற்கும், வீட்டு வேலைசெய்வதற்கும் ஒரு பெண் வேண்டும் என்று முடிவு செய்து, வில்சன் கார்டனில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் கேட்டிருந்தார். 

அதன்படி, அந்த நிறுவனமும் இருபத்தொரு வயதுடைய இளம்பெண் ஒருவரை பரசிவமூர்த்தியின் வீட்டிற்கு அனுப்பி வைத்தது. அங்கு அந்த இளம்பெண்ணும் வேலை செய்து வந்துள்ளார். 

இந்நிலையில், அந்த இளம்பெண் வீட்டில் தனியாக இருந்த போது, அவரை பரசிவமூர்த்தி பாலியல் பலாத்காரம் செய்து, இதனை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமோ அல்லது வேறு யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி உள்ளார். 

இந்த சம்பவம் குறித்து அந்த இளம்பெண், முதலில் யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் இருந்தார். அதன் பின்னர் தன்னை வேலைக்கு அனுப்பிய நிறுவனத்தின் அதிகாரியை மொபைலில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்கள் குறித்து தெரிவித்தார். 

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நிறுவனத்தின் அதிகாரி, இந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் -படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து பரசிவமூர்த்தியை கைது செய்தனர். அவரிடம் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளபட்டு வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near banglore young man arrested for sexuall harassment case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->